உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்கள்: போக்குவரத்து பாதிப்பு!

விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்கள்: போக்குவரத்து பாதிப்பு!

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகம், ஆடிப்பூரம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட விசேஷ உற்சவங்கள்; பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை போன்ற மாதாந்திர சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் கொண்டுவரும் இருசக்கர வாகனங்கள், கார் போன்றவை சன்னதி வீதியில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து "தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கோவிலுக்கு எதிரே "வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. இருப்பினும் இருசக்கர வாகனங்கள் ஸ்டேண்டுக்குள் நிறுத்தாமல் கோவில் வாசலில் நிறுத்துவது தொடர்கிறது. போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சன்னதி வீதியில் தினசரி போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. இந்நிலையில், சன்னதிவீதியில் கோவில் வாசலில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு தொடர்வதால், பக்தர்கள், நெடுந்தூர பயணிகள் கடும் சிரமமடைகின்றனர்.எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !