கருவறையில் இருக்கும் சுவாமி தரிசனத்தின் சிறப்பு என்ன?
ADDED :4364 days ago
கோபுரம், மூலவர் இரண்டு தரிசனமே புண்ணியம் தருபவையே. கோபுரத்தில் இறைவன் ஸ்தூலமாகவும் (வெளிப்படையாகவும்), கருவறையில் சூட்சுமமாகவும் (நுட்பமாகவும்) இருப்பதாக ஐதீகம். எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கோபுர தரிசனம் கண்ணில் படும். கோயிலுக்குள் செல்ல இயலாத சமயத்தில், கோபுரத்தைக் கண்டு வணங்குவதற்காக இவ்வாறு பெரியவர்கள் சொல்லியுள்ளனர்.