உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜர் ஆராதனை ஜன., 17ம் தேதி துவக்கம்!

தியாகராஜர் ஆராதனை ஜன., 17ம் தேதி துவக்கம்!

தஞ்சாவூர்: திருவையாறில், ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின், 167வது ஆராதனை மஹோத்ஸவம், வரும் ஜன., 17ம் தேதி, விமரிசையாக துவங்குகிறது என, தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை தலைவர், ஜி.ஆர்.மூப்பனார் கூறினார். திருவையாறில் அவர் கூறியதாவது: காவிரி வடகரையில் அமைந்துள்ள திருவையாறில், ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின், 167வது ஆராதனை மஹோத்ஸவ விழா, வரும் ஜன., 17ம் தேதி துவங்குகிறது. மாலை, 5:00 மணிக்கு துவங்குகிறது. விழாவில் இரவு 7:00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஜன., 18, 19ல், காலை, 9:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை, இசைநிகழ்ச்சியும், 20ம் தேதி காலை, 6:00 மணிக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை சார்பில் சஹஸ்ர நாம அர்ச்சனையும், காலை, 9:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, இசை நிகழ்ச்சிகளும், இரவு, 11:00 மணிக்கு மேல் திவ்யநாமமும் நடக்கிறது. ஐந்தாம் நாள், 21ம் தேதி காலை, 6:30 மணிக்கு, உஞ்சவிருத்தி பஜனையும், காலை, 8:30 மணிக்கு நாதஸ்வர இசையும், 9:00 மணிக்கு ஆராதனை மற்றும் பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் மஹாபிஷேகமும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், இசை நிகழ்ச்சிகளும், இரவு, 7:30 மணிக்கு மல்லாரியுடன் ஸத்குரு தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலம், மற்றும் ஆஞ்சநேய உற்சவ மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இசை நிகழ்ச்சிகளில், நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் பங்கேற்று, சிறப்பிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !