திருவாரூர் பதஞ்சலி மனோகரர் கோவிலில் நடராஜபெருமான் பாததரிசனம் காட்சி!
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் திருச் சபை யில் நடராஜபெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு அபிஷே கமும், ஆருத்ரா தரிசன பெருவிழாவில் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர் களுக்கு, தியாகேச பெருமான் பாததரிசனம் அருளிய காட்சி நடந்தது. தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வி யாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித்திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ் சலி-வியாக்கிரபா மகரிஷிகளுக்கு ரத்ரபாதம் காட்டி விளமலில் அருளியதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக் கு திருவடிக்காட்டி அருளியதை ஆருத்ரா தரிசனமாக உலகெங்கும் கொண்ட õடப்படுகிறது.
மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ விமோசனம்பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆண் டுதோறும் ஆருத்ரா தரிசன பெருவிழா மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. 17ம்தேதி இரவு 7.30 மணிக்கு திருச்சபையில் நடராஜபெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு அபிஷேகமும், 18ம்தேதி அதி காலை 4 மணிக்கு நடராஜ பெருமான் லிங்கத்தில் எழுந்தருளி பதஞ்சலி வியாக்கி ரபாத மகரிஷிகளுக்கு பாத தரிசனம் அருளுதல் நிகழ்ச்சியும், காலை 4.45 மணிக்கு பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் தியாகராஜர் கோவிலுக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணிக்கு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு, தியாகேச பெருமான் பாததரிசனம் காட்சி அருளுதல் நிகழ்ச் சியும் நடந்தது. திருவா திரை நாளில் பதஞ்சலி வியாக்கரபாத முனிவர்களுக்கு தியாகேசப் பெருமான் காட்சி அருள்வது இடது பாத தரிசனம் ஆகும். இறைவன் அர்த்த நாரீஸ்வரராக இருக்கும் போது இடது பாகம் சக்தியின் பாதம் ஆனதால் இட து பாத தரிசனம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். என்பதால் தடைபடும் திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் தியாகராஜர் திருக்கோவிலில் நடந்த தரிசன நிகழ்ச்சியில் ஆயிரக்க ணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.