வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி!
ADDED :4337 days ago
நாகப்பட்டினம்: நாகை அருகே, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு துவங்கிய, சிறப்பு பாடல் திருப்பலி, நேற்று அதிகாலை,1:30 மணி வரை நடந்தது.25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற, பாடல் திருப்பலியில்,இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பு, நற்கருணை ஆசிர், உலக அமைதிக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய, மொழிகளில் நடந்தது.