உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்குள் மெதுவா நடக்கணும்!

கோயிலுக்குள் மெதுவா நடக்கணும்!

கோயில்களில் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வலம் வருவது வழக்கம். சிலர், அவசரமாக கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேகமாக சுற்றுவர். சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்வர். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு. ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி மெதுவாக செல்வாளோ அதுபோல வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !