உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்!

மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்!

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை  ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் பனியிலும் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளி காப்பு அலங்காரமும் செய்தனர். இரவு 11 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கி 12.30 மணிவரை நடந்தது. ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருளியதும், கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களும் பாடினர்.

ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். இதில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், விழுப்புரம் ஆர்.டி.ஓ., அனுசுயா தேவி, அறங்காவலர் தலைவர் சரவணன், அறங்காவலர்கள்  ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மார்கழி மாத குளிர் வாட்டி எடுத்த போதும் வழக்கம் போல் லட்சகணக்கில் பக்தர்கள் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !