வீரட்டானேஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு வழிபாடு
ADDED :4483 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டுபொங்கலை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கடஸ்தாபனம், நந்திகேஸ்வரருக்கு மகா அபிஷேகம், காய்கறி, தட்சணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. உற்சவ மூர்த்தி சிவானந்தவள்ளி சமேத சந்திரசேகரர் நந்திகேஸ்வரர் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து சோடசோபபச்சார தீபாராதனை, வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.