உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரையில் நடந்த பழநி தெப்ப உற்சவ விழா!

கரையில் நடந்த பழநி தெப்ப உற்சவ விழா!

பழநி: பழநி பெரியநாயகியம்மன்கோயில் குளத்தில் தண்ணீர் இல்லாததால், கரையில், தெப்ப உற்சவ விழா நடந்தது. பழநி தைப்பூச விழா, பெரிய நாயகியம்மன் கோயிலில், ஜன.,11ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்தாம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவ விழா நடந்தது. குளத்தில் தண்ணீர் இல்லாததால், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தெப்பக்குளக்கரையில் எழுந்தருளினார். பின், தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட மேடையில் கலசங்கள் வைத்து, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், சுவாமிக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 11.30 மணிக்கு கொடி இறக்கத்துடன் தைப்பூச விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !