மன்னார்குடி ஆஞ்சநேயர் கோவிலில் விடையாற்றி உற்சவம்!
ADDED :4406 days ago
மன்னார்குடி: செந்தூர ஆஞ்சநேயர் கோவிலில் தனுர்மாத பஜனை விழா நடைபெற்று வந்தது. விழாவில் விடையாற்றி உற்சவம் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சுவாமிகள் வேடம் அணிந்த பள்ளி குழந்தைகளின் பேரணி நடைபெற்றது. குழந்தைகள் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன், கருடன், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடம் அணிந்த வந்தனர்.