திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்!
ADDED :4416 days ago
திருவண்ணாமலை: பிப்ரவரி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி பௌர்ணமி வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே, அன்றைய தினம் அதிகாலை 4.28 முதல் மறுநாளான சனிக்கிழமை (பிப்.15) காலை 6.23 மணி வரை கிரிவலம் வரலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.