உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் குழந்தை யேசு தேர் பவனி

திருப்போரூரில் குழந்தை யேசு தேர் பவனி

திருப்போரூர் : திருப்போரூர் குழந்தை யேசு ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு, தேர் பவனி கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் அடுத்த, கண்ணகப்பட்டில் குழந்தை யேசு ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் பவனி விழா விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு இவ்விழா, கடந்த 14ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15ம் தேதி, நற்கருணை பெருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, வேளாங்கண்ணி மாதா, குழந்தை யேசு, சூசையப்பர் ஆகியோரின் அலங்கார தேர் பவனி வாண வேடிக்கையுடன் விமரிசையாக நடந்தன. ஆலய பக்தர்களுடன் ஏராளமான பொதுமக்களும் தேர் பவனியை மெழுகுவர்த்தி ஏந்தி, வரவேற்றனர். கண்ணகப்பட்டு, காலவாக்கம், தண்டலம், திருப்போரூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தேர் பவனி நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !