கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா
ADDED :4409 days ago
மொடக்குறிச்சி: நஞ்சை கொளாநல்லியில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.