உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிவராத்திரி விழா!

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிவராத்திரி விழா!

திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் நாளை மறுநாள் 27ம்தேதி 10ம் ஆண்டு சிவன்ராத்திரி விழாவில், சிவபாத தரிசனம் நடக்கிறது. தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வி யாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித்திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ் சலி-வியாக்கிரபா மகரிஷிகளுக்கு ருத்ரபாதம் காட்டி விளமலில் அருளி யதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனி வர்களுக் கு திருவடிக்காட்டி அருளியதை ஆருத்ரா  தரிசனமாக உலகெங் கும் கொண்ட õடப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ, விமோசனம்பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆண் டுதோறும் ஆருத்ரா தரிசன பெருவிழா,மற்றும் சிவன்ராத்திரிவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி  நாளை மறுநாள் 27ம்தேதி  சிவன்ராத்திரி விழா மிகவும் விமர்சியாக நடக்கிறது. இந்தவிழாவில் யுகம் படைக்க, சிவன் அக்னி பிழம்பாக விஸ்வரூம் எடுத்து, மகாவிஷ்ணு திருவடியை பார்த்த இடம் திருவிளமல், இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவன் ராத்திரி விழா சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை 27ம் தேதி மாலை 7.30 மணிக்கு முதல் காலம், இரவு 10.30 மணிக்கு இரண்டாம் காலம், நடுநிசி 12.30 மணிக்கு மூன்றாம் காலம், அதிகாலை 2.30 மணிக்கு நான்காம் கால பூஜைகளும் நடக்கிறது. அதன் பின் 3 மணிக்கு சிவபெருமான் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடக் கிறது. இத்திருநாளில் ஈசனின் முகமான தியாகேசனின் முகம் பார்த்து, ஈசன் திருவடியான திரு விளமலில் பாத தரிசனம்பார்த்தால் சாவ,பாவ விமோசன ம் பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த விழாவில் பங்கேற்ற கோவில் சிவாச்சாரியர்  சந்திரசேகரரை   9489479896 என்ற அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !