உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா


திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் 182-வது அவதார தின விழா இன்று காலை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதார பணிவிடையும் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !