மதுரை சார்பில் சபரிமலையில் சேவை செய்தவர்களுக்கு பாராட்டு!
ADDED :4393 days ago
மதுரை: மதுரை மாவட்டத்தின் சார்பில், மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலையில் சேவை செய்த 100 பேருக்கு மதுரையில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலையில் கல்லூரி மாணவர்கள் உட்பட 3000 பேர் சேவை புரிந்தனர். மலை ஏற்றத்தின் போது உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி செய்யப்பட்டது என்று அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாநிலத் தலைவர் தெரிவித்தார்.