செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஜோதி தரிசன வழிபாடு!
ADDED :4261 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர்.மாலை 5 மணி முதல் 8 மணிவரை விசேஷ ஹோமம் நடந்தது. இரவு 9 மணிக்கு கலச நீர் அபிஷேகம், மகா புஷ்பாஞ்சலியும், சகஸ்ர நாம அர்ச்சனையும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. எம்.எல்.ஏ., கணேஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் ராம கன்னியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.