திரவுபதியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா!
ஆனைமலை: ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை 9.05 மணிக்கு நடக்கிறது.ஆனைமலை பகுதியில் நடைபெறும் திருவிழாக்களில், திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவும் ஒன்று. கடந்த மாதம் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அதையடுத்து பதினைந்து நாட்கள், மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 9.00 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை குண்டத்தில் இறங்குதல் நடைப்பெறுகிறது. குண்டத்தில் இறங்குவதற்காக விரதமிருந்த பக்தர்கள், 60 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள குண்டத்தில் இறங்குகின்றனர். இதையடுத்து நாளை, ஊர்வலம் வந்த தேர் நிலை நிறுத்தல் மற்றும் ஊஞ்சல், பட்டாபிேஷகம் நடக்கிறது. வரும் 19ம் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் போர் மன்னன் காவு நிகழ்சியுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.