உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோய் தீர்க்கும் மாவிளக்கு வழிபாடு!

நோய் தீர்க்கும் மாவிளக்கு வழிபாடு!

மாக்கோலம் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல்போன்ற வழக்கங்கள் வழிபாட்டில் பழமையானவை. மாக்கோலம் இடும் வழிபாடுஅரிதாகி விட்டாலும், மாவிளக்கு வழிபாடுஇன்றும் தொடர்கிறது. நோய்தீர்வதற்காக, மாரி, காளி போன்ற பெண்தெய்வங்களுக்கு இதை நேர்த்திக்கடனாகச் செய்வர். ஆறு, குளங்கள் உள்ள ஊரில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலன் தரும்.இங்குள்ள ஆறு, குளத்தில் நீராடிய பின்,மனத்தூய்மையுடன் ஊற வைத்த அரிசியைஇடித்து மாவாக்க வேண்டும். அதில் இளநீரும், வெல்லமும் சேர்த்துப் பிசைந்து இரண்டு உருண்டையாகப் பிடிக்க வேண்டும். அம்மன் சந்நிதி முன் வாழை இலைவிரித்து, மாவுருண்டையில் குங்குமம் இட்டு விளக்கேற்ற வேண்டும்.அம்பிகையே! எங்கள் நோய் நொடியைப்போக்கி, ஆரோக்கியத்தை தந்தருள வேண்டும். உன் அருளால் குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !