உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 10ம் வகுப்பு மாணவர்களுக்காக ஹயக்ரீவர் கோவிலில் அர்ச்சனை!

10ம் வகுப்பு மாணவர்களுக்காக ஹயக்ரீவர் கோவிலில் அர்ச்சனை!

புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக, சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில், லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக, ஆண்டுதோறும் சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. வரும் 26ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு துவங்குவதால் அவர்களுக்காக சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, தமிழில் ஒவ்வொரு நாமாவளிக்கும் விளக்கத்துடன் கூடிய சகஸ்ரநாம புத்தகம், வெள்ளி டாலர், இரட்சை, பேனா வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர், நட்சத்திரம், தேர்வு தேதி ஆகியவற்றுடன் 750 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் மேலும் விபரங்களுக்கு 90954-28302 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை லட்சுமி சரஸ் சாருதி டிரஸ்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !