பழநி மாரியம்மன் கோயில் விழா: 1503 பால்குடம் எடுத்து வழிபாடு!
பழநி : பழநிமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு அன்னாபிஷேகம், உற்சவசாந்தி விழா நடந்தது. பழநி, வ.உ.சி., மன்றம் சார்பில், பாண்டிய வேளாளர் மடத்திலிருந்து, 1503 பால்குடங்கள் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன் கோயிலை அடைந்தது. உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மனுக்கு அன்னத்தால் செய்யப்பட்ட அன்னபூரணி அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சித்தனாதன் அன் சன்ஸ் சிவனேசன் தலைமை வகித்தார். ஆலோசனை குழு தலைவர் பெருமாள், நகராட்சி தலைவர் வேலுமணி, கவுன்சிலர் சுந்தர் முன்னிலை வகித்தனர்.64 ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் சார்பில், உற்சவ சாந்தி விழா நடந்தது. சண்முகநதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்து, அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை, வ.உ.சி., மன்றத்தினர், கொங்கு வெள்ளாள கவுண் டர்கள் சங்கத்தினர் செய்தனர்.