உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலுார் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

சூலுார் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

சூலுார் : தென்னம்பாளையம் ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் சுவாமி கோவில் மஹா சம்ப்ரோக்ஷணம் நேற்று நடந்தது. சூலுார் அடுத்த தென்னம்பாளையம், விசாகா நகரில் ஸ்ரீ ஜெய ஆஞ்சநேயர் கோவில் புதிதாக அமைக்கப்பட்டது. ஸ்ரீ விஸ்வக்சேனர் ஆதாரனையுடன் நேற்று முன்தினம் மாலை கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. தொடர்ந்து முதற்கால ஹோமம், பூர்ணகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை 5.00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தானம், மஹா பூர்ணகுதி நடந்தது. காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ஸ்ரீஜெய ஆஞ்சநேயருக்கு மஹா சம்ப்ரோஷணம் நடந்தது. தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !