கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் பூ குண்டம் திருவிழா
ADDED :4258 days ago
கோத்தகிரி : கோத்தகிரி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா கொண்டாடப்பட்டது. கடந்த 6ம் தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 17ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, அக்னி கம்பம் பூச்சாட்டுதலும், 18ம் தேதி காலை 7:00 மணிக்கு பூ குண்டம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.00 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய விதிகளில் அம்மனின் திருத்தேர் வீதி உலா நடந்தது. இதில், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.