உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் பூக்குழி விழா

தோட்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் பூக்குழி விழா

வேலாயுதம்பாளையம் :  கரூர் மாவட்டம்,  புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சியின் தோட்டக் குறிச்சி கிராமத்தில் மாரி யம்மன் கோவில்  பங்குனி மாத  விழா  கடந்த 26–ம் தேதி  துவங்கியது.  4 நாட்கள் திருவிழா நடை பெற்ற இத்திருவிழாவில்  முதல்நாள் நிகழ்ச்சியில் வடிசோறு வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியன்று  அம்மன் காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டார். அப்போது பக்தர்கள் மாறு வேடங்களில் கோவிலில் இருந்து முளைப்பாரி  எடுத்து சென்றனர்.   மாலை 5 மணி அளவில் கோவில் முன்பு   பக்தர்கள் பூக்குழி இறங்கினர் .3–ம் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !