உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் வீரதி ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் வீரŒக்தி ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி மாத அமாவாசை தினத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பதினோரு வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சகஸ்கர நாம அர்ச்சனை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. அஞ்சநேயருக்கு வெற்றிலை, துளசி, வடை மாலைகள் அணிவிக்கப்பட்டு  மகா தீபாராதனையும் பிரசாத வினியோகமும் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை பாலாஜி அய்யர் நடத்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !