உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர விழா

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர விழா

பெரம்பலூர் :    பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற தண்டாயுதபாணி திருக்கோயிலில்,  பங்குனி உத்திர நிகழாண்டு ஏப். 4 மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜை நடத்தப்பட்டு, 5-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  நாள்தோறும்   காலை 10 மணிக்கு மலையில் உள்ள மூலவர் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிறப்பு ரதங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.7-ம் திருவிழாவான ஏப். 11-ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், 12-ம் தேதி சிவன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் ஏப். 13-ம் தேதி மாலை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !