கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 இளநீர் அபிஷேகம்!
ADDED :4242 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பு அருகே குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழனால் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த கோயில் ஆகும். இந்த கோயிலில் கோடை வெப்பம் நீங்கி மழைபெய்ய வேண்டி 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது. இதையொட்டி நிர்மாலய தரிசனம், தீபாரதனை, மூலவரான 5 அடி உயர குகாநாதீஸ்வரர் சுவாமிக்கு 1008 இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அபிஷேக இளநீர் பாட்டில்களில் அடைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து அலங்கார தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பக்தர்கள் பேரவை தலைவர் கோபி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.