உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை: வீரகாமாட்சி அம்மன் கோயில் திருவிழா

உடுமலை: வீரகாமாட்சி அம்மன் கோயில் திருவிழா

உடுமலை: புதுப்பாளையத்தில் உள்ள வீரகாமாட்சி அம்மன் கோயில் விழா  துவங்கியது. அம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன.
மார்ச் 29-ம் தேதி தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டு,அம்மனுக்கு தீர்த்த காணிக்கை செலுத்தப்பட்டது. கடந்த ஏப்.1-ம் தேதி ஊர் கிணறு வளாகத்தில் சக்தி குப்பம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், அம்மன் வீதிஉலாவும் நடந்தது. நேற்று பிற்பகல் 3:00  மணிக்கு மஞ்சள் நீராட்டும், அம்மனுக்கு அபிஷேக பூஜையும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !