விழுப்புரம் பக்தஜனேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய தரிசனம்!
ADDED :4241 days ago
விழுப்புரம்: திருநாவலூர் மனோன்மணி சமேத பக்தஜனேஸ்வரர் கோவில் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219 வது தேவாரத்தலம் ஆகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், பங்குனி மாதம் 23 முதல் 27 ஆம் நாள் வரை சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. சுந்தரர் அவதரித்த தலம் சுக்ரன் வழிபட்ட சிவதலம் இங்கு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். இக்கோயிலில் நேற்று நடந்த சூரிய தரிசனம் நிகழ்ச்சியில் மூலவர் சிவன் மீதும், அம்மன் மீது சூரிய ஒளி விழுந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.