கீழப்பாளையம் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :4170 days ago
உளுந்தூர்பேட்டை: கீழப்பாளையம் கிராமத்தில் உள்ள பாவாடைராயன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. எலவானாசூர் கோட்டை கீழப்பாளையத்தில் உள்ள ஸ்ரீமாகணபதி, பெரியநாயகி அம்மன், கருப்பண்ண சுவாமி மற்றும் பாவாடை ராயன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும், மாலை 6 மணிக்கு கலச ஸ்தாபனம், அங்குரார்பணம், முதல் காலை யாகசாலை பூஜை, மகா பூர்ணஹுதி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, ஹோமம், பூர்ணஹுதி தியை தொடர்ந்து கலசம் புறப்பாடாகி, காலை 8:45 மணிக்கு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.