உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழப்பாளையம் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

கீழப்பாளையம் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

உளுந்தூர்பேட்டை: கீழப்பாளையம் கிராமத்தில் உள்ள பாவாடைராயன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  எலவானாசூர் கோட்டை கீழப்பாளையத்தில் உள்ள ஸ்ரீமாகணபதி, பெரியநாயகி அம்மன், கருப்பண்ண சுவாமி மற்றும் பாவாடை ராயன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையும், மாலை  6 மணிக்கு கலச ஸ்தாபனம், அங்குரார்பணம்,  முதல் காலை யாகசாலை  பூஜை, மகா பூர்ணஹுதி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை,  ஹோமம், பூர்ணஹுதி தியை தொடர்ந்து கலசம் புறப்பாடாகி, காலை  8:45  மணிக்கு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !