உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து ராஜாஜி நகரில், புதியதாக கட்டப்பட்ட வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. இதனை முன்னிட்டு, கடந்த, 23ம் தேதி காலை, 6 மணிக்கு தேவி பட்டாளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 7 மணிக்கு மும்மூர்த்திகள் ஊர்வலம் நடந்தது. 24ம் தேதி மாலை, 4 மணிக்கு, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, 8 மணிக்கு மஹாபூர்ணாஹீதி, 8.15 மணிக்கு கலசப்புறப்பாடும், 8.30 மணிக்கு, விமான கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9 மணிக்கு, ஸ்ரீவித்யா கணபதி நவக்ரஹம், பரிவாரங்களுக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !