வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக 108 தீர்த்த குட ஊர்வலம்
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 108 தீர்த்த குட ஊர்வலம்.
அவிநாசி வட்டம்,வேலாயும்பாளையம் ஊராட்சி,காசிகவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 108 தீர்த்த குடம் மற்றும் முளைப்பாளிகை எடுத்து ஊர்வலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்றனர். இன்று விமான கலசம்,புதிய விக்கிரகங்களுக்கு திருமஞ்சனம், கலச பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ விஷ்வக்ஷேன பூஜை, பஞ்சகவ்யம்,துவார பூஜை ஆகியவற்றுடன் முதல்கால யாக பூஜை நடைபெறுகிறது. நாளை சுப்ரபாதம், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி, சர்வ காயத்ரி ஹோமம் ஆகியவற்றுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று விமான கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காசிகவுண்டன்புதூர் ஊர்மக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.