ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :17 minutes ago
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், தீர்த்தம் அழைப்பு, விக்னேஷ்வர பூஜை, மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து, கருட தரிசனத்துடன் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில், பரிவட்டத்துடன் சிறப்பு மரியாதை, பிரசாதம் வழங்கல் நடந்தது. விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.