காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ஸ்ரீசீதா கல்யாண உற்சவம்
ADDED :4184 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ஸ்ரீசீதா கல்யாண உற்சவம் நடந்தது. காட்டுவனஞ்சூர் கிராமத்தில் ஸ்ரீராம பக்த மண்டலி சார்பில் 37 ம் ஆண்டு ஸ்ரீராமநவமி உற்சவம் 4 நாட்கள் நடந்தது. நேற்று ஸ்ரீசீதா கல்யாண நிகழ்ச்சி துவங்கியது. இதனை தொடர்ந்து காலை உஞ்சவிர்த்தியும், பகல் 11 மணிக்கு அஷ்டபதி, அதனை தொடர்ந்து ஸ்ரீசீதாகல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. சென்னை பிச்சுமணி பாகவதர், திருவண்ணாமலை ரங்கநாத பாகவதர், குப்புராஜ் பாகவதர், கோஷ்டியினரால் சீதா கல்யாண வைபவம் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்சியில் நடராஜய்யர், சீனுவாசய்யர், துரை அய்யர் உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பி.டி.ஓ., வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.