கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல்!
ADDED :4184 days ago
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று சாகை வார்த்தலுடன் சித்திரை பெரு விழா துவங்கியது. அப்போது பல்வேறு கிராம பெண்கள், அம்மன் கோவில் முன்பு கஞ்சி மற்றும் கூழ் கலயங்களை வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.