சிறுவாடி திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி விழா
ADDED :4318 days ago
முருக்கேரி,: முருக்கேரி அடுத்த சிறுவாடி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில்தீமிதி திருவிழா நடந்தது.கடந்த மாதம் 24ம் தேதிதிரவுபதியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சிநடந்தது. தொடர்ந்து தினமும் மூலவருக்கு சிறப்புஅபிஷேக ஆராதனை நடந்தது. அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் மகாபாரதத்தின் கடைசி நாளாகபோரிடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று திரவுபதியம்மன்கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.