உலக நன்மைக்காக பராசக்தி கோவிலில் பூஜை
ADDED :4385 days ago
புதுச்சேரி: உலக நன்மைக்காகவும் மற்றும் மழை வேண்டியும் புதுச்சேரி கலியுக பராசக்தி கோவிலில் நேற்று சக்தி பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், தேன் உள்பட பல்வேறு அபிஷேகங்களும் அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடந்தது. பின்னர் மகாதீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.