உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்!

மயிலாடுதுறை: கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இந்த கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது. இதில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதைகள் நீங்கும். வைகாசி மாத அமாவாசையான இன்று காலை 9மணிக்கு ஸ்ரீமகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மதியம் 12:30மணிக்கு தண்டபானி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றலை கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்திவைத்தார். இதில் திரளான ப க்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்திலிருந்து அய்யாவாடிக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாச்சியார் கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !