உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; பக்தர்கள் குவிந்தனர்

வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்; பக்தர்கள் குவிந்தனர்

 புதுச்சேரி: முதலியார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது.


முதலியார்பேட்டை – கடலுார் மெயின் ரோட்டில் பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி, கடந்த 22ம் தேதி யஜமான சங்கல்பம், ஆசார்ய வரணம், ரித்வித் வரணம், விஷ்வக்ேஸன ஆராதனம், புண்யாஹவாசனம், ஸோமகும்ப ஸ்தாபனம், வேத பிரபந்த துவக்கம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்து, 23ம் தேதி காலை தீர்த்த ஸங்ரஹம், ரக் ஷாபந்தனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, ஜலாதிவாஸம், விமான சாயதிவாஸம், மனோன்மானசாந்தி ஹோமம், மாலை நேத்ரோன்மீலணம், கர்மாங்க திருமஞ்சனம், சதுஸ்தானார்சனம், சாற்றுமறை நடந்தது. நேற்று  (24ம் தேதி) காலை சதுஸ்தானார்சனம், ஹோமம், பூர்ணாஹூதி சாற்றுமுறை, மூலவர்கள் திருமஞ்சனம், மாலை  சதுஸ்தானார்சனம், தத்வ ஹோமம், நியாசம், சாற்றுமுறை நடந்தது.  முக்கிய நிகழ்வாக, இன்று (25ம் தேதி ) காலை விஷ்வரூபம், சதுஸ்தானார்சனம், மகா பூர்ணாஹூதி, தசதானம், கலசங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு பெருமாள், தாயார் லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் சீதா லட்சுமண ஹனுமத் சமேத ராமச்சந்திர சுவாமி ஆகியோருக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை, பெரிய சாற்று முறை நடந்தது. திரளான பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் செய்தனர். மாலை கருட சேவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கவுரவ தர்மகர்தாவும், புதுச்சேரி பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான ராமகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கிளாஸ் - 1 ஒப்பந்ததாரர ரமேஷ் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !