அமைச்சர் வெற்றி பெற கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது கட்டி வழிபாடு
ராமநத்தம்: அமைச்சர் கணேசன் மீண்டும் வெற்றி பெற கொளஞ்சியப்பர் கோவிலில், தி.மு.க.,வினர் பிராது கட்டி வழிபட்டனர்.
திட்டக்குடி தொகுதியில் கடந்த, 2016 மற்றும் 2021,ல் நடந்த சட்டசபை தேர்தலில், அமைச்சர் கணேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில், 2021,ல் நடந்த தேர்தலில் 21 ஆயிரத்து 563 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில், வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வகுமாரி தலைமையிலான தி.மு.க.,வினர், வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி தலைமையிலான தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும், திட்டக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கணேசன் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பிராது கட்டினர். அப்போது, தி.மு.க., தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரகுநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜரத்தினம், தி.மு.க., நிர்வாகிகள் மாரி முத்தாள் குணா, பாலாஜி, அசோகன், சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.