திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 20 திருமணங்கள்
ADDED :3 days ago
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 20 திருமணங்கள் நடந்தன.
திருப்போரூரில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் மூலவர் கந்தசுவாமி சுயம்புமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விகாசம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடக்கிறது. இக்கோவிலில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முகூர்த்த நாளான இன்று கோவிலில் திருமணம் செ ய்வோர் 20க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் கோவில் பிரகாரம், உற்சவர் மண்டபம், வட்ட மண்டபம் ஆகிய இடங்களில் திருமணம் செ ய்தனர். முன்பதிவு செ ய்யாதவர்களும் திருமணம் செய்ய வந்திருந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.