உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேம்!

விருத்தாசலம் சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேம்!

விருத்தாசலம்: விருத்தாசலம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் வடக்கு வீரபாண்டியன் தெரு, வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜைகளுடன் துவங்கியது. மாலை வாஸ்துசாந்தி, பிரவேச பலி, முதல்கால யாகபூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9:00 மணிக்கு பூர்ணாகுதி, கடம்புறப்பாடு நிகழ்ச்சியுடன் 9:30 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்கை, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சுப்ரமணியர் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !