எட்டியம்மன் கோவில் 2ம் தேதி கும்பாபிஷேகம்!
செஞ்சி: செஞ்சி தாலுகா நரசிங்கராயன் பேட்டை எட்டியாந்தாங்கல் ஏரிக்கரை கீழே உள்ள எட்டியம்மன், மகா சாஸ்தா கோவிலை புதுப்பித்து ஜூலை 2ம் தேதி ர்னோர்தாரண மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். நாளை (1ம் தேதி) காலை 10.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாகனம், எஜமான மகா சங்கல்பம், கோபூஜை, புற்று ரூபத்தில் வீற்றிருக்கும் அன்னைக்கு விசேஷ பூஜை, கணபதி ஹோமம் செய்ய உள்ளனர். மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, காப்பு கட்டுதல், கலச ஸ்தாபனம், யாகசாலை எழுந்தருளள், யாக சாலை பூஜைகளை செய்ய உள்ளனர். இரவு 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தீபாரதனையும், அஷ்டபந்தன மருத்து சாற்றுதலும் நடக்க உள்ளது. 2ம் தேதி காலை 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகளும் நடக்கின்றன. 8.30 மணிக்கு பூர்ணாஹூதியும், 9 மணிக்கு யாத்திராதானம், 9.15 மணிக்கு கடம் புறப்பாடும், 10 மணிக்கு எட்டியம்மனுக்கும், 10.15 மணிக்கு ஏனைய தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.