உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி வீதியுலா!

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்தி வீதியுலா!

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்தி திருவீதியுலா நடந்தது. ரிஷிவந்தியம்  அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவம், கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபி ஷேகமும், பூஜைகளும் நடந்து வருகிறது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் 4ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு சுவாமி,  திருமுத்தாம்பிகை அம்மன் மடிமீது கால்வைத்து, சயனகோலத்தில் நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று ரிஷப  வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள்  செய்தனர். இன்று, யானை வாகனத்தில் காட்சி தருகிறார். நாளை (8ம்  தேதி) இரவு 7 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கு, திருமுத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யண வைபவம் நடக்கிறது. வரும் 10ம் தேதி திருதேர்  உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !