செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :4116 days ago
பண்ருட்டி: பண்ருட்டி லிங்காரெட்டிப்பாளையம் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 150 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 7ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை 2ம் கால யாகசாலை பூஜையும், இரவு 3ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாகுதியும் நடந்து, காலை 11:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 150 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.