சுப்ரமணிய சுவாமி கோவிலில் 108 பால் குட ஊர்வலம்!
ADDED :4230 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி 108 பால் குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 9.45 மணிக்கு பஸ் நிலையம் அருகே இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. அங்கு சுப்ரமணிய சுவாமிக்கு பால் குட அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் தீபாரதனைகள் செய்யப்பட்டன. இதில் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.