செஞ்சி பகுதியில் பிரதோஷ வழிபாடு
ADDED :4149 days ago
செஞ்சி:செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர், அபிதகுசாம்பாள் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். ரிஷிப வாகனத்தில் சாமி கோவில் உலா நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரரை வழிபட்டனர். பிரசாத வினியோகம் நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.