ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர கருடசேவை!
ADDED :4148 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் நாளில் நடந்த கருடசேவையில் பெரியாழ்வார், ஆண்டாள் அன்னவாகனத்திலும், ரெங்கமன்னார், பெரியபெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.