உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலா

புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலா

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த, அகஸ்தியம்பள்ளி பக்தர்குளம் மாரியம்மன் கோவிலில், ஆடி ஆண்டுப்பெருவிழா, 10 நாட்களாக நடந்தது. நேற்று இரவு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர் மேலும், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பால் காவடி போன்ற நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !