எல்லையம்மன் கோவிலில் ஆடி திருவிழா
ADDED :4144 days ago
திருத்தணி : எல்லையம்மன் கோவிலில், நேற்று நடந்த, ஆடித்திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி, நேரு நகர் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில், நேற்று, ஆடித்திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்தும், சிறப்பு பூஜைகள் நடத்தியும், வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.